இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையம்; சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


சென்னையைச் சிம்ஸ் மருத்துவமனை தூக்கக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முதல் 'ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை 'தொடங்கியுள்ளது. 

தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், 10 மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையத்தில், குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நரம்பியல், உளவியல் மற்றும் சுவாசம் சார்ந்த தூக்கக் கோளாறுகளுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இத்திறப்பு விழா நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் பங்கேற்றதோடு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார். 

இந்த தூக்கவியல் மையத்தில், உறங்கும் நேரத்தில் ஏற்படும்,  மாரடைப்பு, இதயச் செயலிழப்பு பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை விளைவிக்கக்கூடிய தூக்கத்துடன் தொடர்புடைய கோளாறுகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்குகிறது.

அத்துடன், காது-மூக்கு-தொண்டை (ENT) நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் அடங்கிய ஒரு கூட்டு மருத்துவக் குழு உலகளவில் சிறந்த தரநிலைகளுடன் CPAP, BiPAP போன்ற நவீன சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்க்கவுள்ளனர். 

மேலும், மிகத் துல்லியமான, வலியற்ற மற்றும் இரத்தம் வராத எண்டோஸ்கோபி, பிளாஸ்மா அடிப்படையிலான மற்றும் கதிர்வீச்சு அதிர்வெண் சிகிச்சை (RF) வழிமுறைகளும் இதில் உள்ளடங்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக, இங்குள்ள பிரத்யேக 'தூக்க ஆய்வகத்தில்', தூக்கத்தின் போது மூளைச் செயல்பாடு மற்றும் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு நிகழ்நேர தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. 

மேலும், குறட்டை உட்பட உறக்க பிரச்சனைகள், உடலியக்கவியல், மூளையின் செயல்பாடு மற்றும் இதய இரத்தநாள ஆரோக்கியம் ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது என இதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. அத்துடன், DISE எனும் நவீன தொழில்நுட்பம் மூலம், மயக்கவியல் மருத்துவரின் ஆதரவோடு நோயாளிக்கு உறக்க நிலையைத் தூண்டி சுவாசப் பாதையில் எங்கு அடைப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

அடுத்து, விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஏற்படும் தூக்க நேர மாற்றத்தைச் சரி செய்வற்கான சிறப்பு செயல்திட்டத்தையும், உறக்கத்தின் போது திடீரென மூச்சு நின்றுவிடும் பிரச்சனைக்கு சிகிச்சையையும் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனையையும் (CBT) இந்த மையம் வழங்குகிறது.

இந்த தூக்கவியல் மையத்தின் இயக்குநர் டாக்டர் கார்த்திக் மாதேஷ் ரத்னவேலு இது குறித்து கூறுகையில்; இரவு நேரத்தில் வரும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம், பெரும்பாலும் தூக்கக் கோளாறு உள்ளவர்களுக்கே ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், புகைப்பிடிப்பது எப்படிப் புற்றுநோயை உண்டாக்குமோ, அதேபோல் சிகிச்சையளிக்கப்படாத தூக்கக் கோளாறுகள் இதய நோய்க்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு 'வழிகாட்டி' நியமிக்கப்பட்டு, பரிசோதனை முதல் சிகிச்சை முடியும் வரை நோயாளிகளுக்குத் துணையாக இருப்பார்கள்." என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indias first integrated sleep center opens at SIMS Hospital in Chennai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->