தகராறில் கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்...! கடத்தலால் கைது! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இடையூர் குன்னு பகுதியை சேர்ந்தவர் 34 வயதான பிரவீனா என்பவர். இவர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து, 2 குழந்தைகள் என்று வாழ்ந்து வந்தநிலையில், அவருக்கு கிரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்காதலனுடன் வாழவேண்டும் என்ற ஆசையில் பிரவீனா, தனது கணவரை விட்டு பிரிந்து கிரிஷுடன் சென்று விட்டார்.

இதில் தனது மகள்களான அனர்கா(14), அபினா(9) ஆகிய இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இவர் வயநாடு மானந்தவாடி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் கிரிஷூடன் குடித்தனம் நடத்தி வந்தார். இதற்கிடையே கிரிஷூடனும் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது.வாக்குவாதம் நடந்தபோது, அவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பிரவீனாவை சரமாரியாக குத்தியுள்ளார்.இதில் படுகாயமடைந்த பிரவீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

பிரவீனாவை மட்டுமின்றி அவரது மூத்த மகளான அனர்காவையும் கிரிஷ் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சிறுமியின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பிரவீனா மற்றும் அவரது மகள் வெட்டப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அது குறித்து காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சிறுமி அனர்காவை மீட்டு சிகிச்சைக்காக மானந்தவாடி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும், பிரவீனா மற்றும் அவரது மூத்த மகள் வெட்டப்பட்ட நிலையில், அவரது இளைய மகளான அபினா எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. வீடு மற்றும் அதனை சுற்றி இருந்த பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

அவர் தனது தாய் மற்றும் அக்காவை கிரிஷ் கத்தியால் வெட்டுவதை பார்த்து பயத்தில் அங்கிருந்து எங்காவது சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.இதையடுத்து தாயை கொலை செய்தபின், சிறுமியை கிரீஷ் காட்டிற்குள் கடத்தி சென்றது தெரிய வந்தது.அடர்ந்த வனப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை ட்ரோன் மூலம் தேடிய காவலர்கள், சிறுமியை கண்டுபிடித்து கிரீஷை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A thief who killed a thief in a dispute Arrested for kidnapping


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->