மைக் கிடைத்தால் போதும்., தத்துவங்களை வாரி வழங்கும் நடிகர் விஜய்சேதுபதியின் சாயம் வெளுத்தது.!
vijay sethupathy worst
மைக் கிடைத்தால் போதும் தத்துவங்களை வாரி வழங்கும் நடிகர் விஜய்சேதுபதி, தனது பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டி தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ, புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது.
மேலும், தத்துவம் பேசும் விஜய் சேதுபதி தனது பொறுப்பற்ற செயலுக்கு மன்னிப்பு கேட்டு, அவர் செய்த மோசமான செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.
இன்னும் சிலர், சாதாரண மக்கள் இந்த தவறை செய்தல் காவல் துறை கைது செய்வதுபோல், விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் என்றும், தத்துவம் பேசும் விஜய் சேதுபதி தானே தனது தவறுக்கு வருந்தி சிறைக்கு சென்று தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எழுந்த கடும் கண்டனங்களால் நடிகர் விஜய் சேதுபதி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் அவரை போலீசார் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.