அடுத்த படத்திற்கு தயாரான சூப்பர் ஸ்டார் ரஜினி.. படப்பிடிப்பு எப்போது தொடக்கம்.? - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி உலக அளவில் இதுவரை மொத்தமாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு தனது 170வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி அடுத்த மாதம் செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajini in thalaivar 170 movie shooting from September


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->