ராஜா ராணி, தெறி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் (61) மாரடைப்பால் கொச்சியில் காலமானார்.

கோட்டயம் பிரதீப் 2001ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு அவர் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், திலீப் உள்ளிட்ட முன்னணி முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ராஜமாணிக்யம், 2 ஹரிஹர் நகர், ஒரு வடக்கன் செல்ஃபி உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை பிரபலமானார். 2016ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான காமெடி விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று அதிகாலை 4:30 மணி அளவில் நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

malayalam actor kottayam pradeep passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->