கரண் ஜோஹரின் ''ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி'' - 10 நாட்களில் ரூ.100 கோடி! - Seithipunal
Seithipunal


கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாக்கி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ''ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி''. இந்த திரைப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரண் ஜோஹர், பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர். இவர் ஷாருக் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'குச் குச் ஹோத்தா ஹை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

மேலும் கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான் போன்ற அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். 

இவர் 2016-ல் வெளியான 'ஏ தில் ஹே முஷ்கில்' என்ற படத்தை கடைசியாக இயக்கினார். அதன் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. அதற்க்கு மாறாக தயாரிப்புப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தினர்.

கரண் ஜோஹர் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இயக்குநராக களமிறங்கிய படம் ''ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி''. 

கடந்த ஜூலை 28-ம் தேதி, இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. காதலை மையமாக கொண்ட இந்த படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்துக்கு ப்ரித்தம் இசையைமத்துள்ளார். ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவானதாக தெரிவிக்கப்படும் இப்படம் 10 நாட்களில் ரூ.105 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karan Zohar directed movie 10 days in 100 crores collection


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->