பிரபல தொகுப்பாளினி எரித்து கொலை.. கள்ளக்காதல் பிரச்சனையில் கணவரின் பேரதிர்ச்சி சம்பவம்.!! அதிர்ந்துபோன திரையுலகம்.!!
in punjab famous Tv lady anchor murder due to illegal affair by husband
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவரின் பெயர் அனிதா சிங். இவருடன் வாலிபர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அனிதாவின் கள்ளக்காதல் தொடர்பான விவரமானது, அனிதாவின் கணவரான ரவீந்தருக்கு தெரியவந்துள்ளது. இதன்பின்னர் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்து, விருந்து ஏற்பாடு செய்துள்ளதாக கூறி அனிதாவை அவரது நண்பரின் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
உணவில் மயக்க மருந்தினை கலந்து கொடுத்து, அனிதா சாப்பிட்டு மயக்கமடைந்ததும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சுமார் 15 நாட்களுக்கு பின்னர் அனிதாவின் உடல் எரிந்த நிலையில் காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையாடடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரவீந்தரின் வாக்குமூலத்தை பெற்றனர். பின்னர் இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ரவீந்தரின் நண்பரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in punjab famous Tv lady anchor murder due to illegal affair by husband