எம்ஜிஆருக்கு கோபத்தில் எழுதிய வாலியின் பாடல் – பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா..? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் வரலாற்றில் “கவிஞர் வாலி” என்ற பெயர் ஒரு பொக்கிஷம். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படப் பாடல்களில் தனது கவிதை மந்திரத்தை பரப்பிய அவர், இன்று வரை ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை வழங்கிய வாலி, அதிலும் அதிகமாக பாடல்கள் எழுதியவர் எம்ஜிஆருக்காகத்தான்.

ஆனால், ஒரு பாடலை அவர் கோபத்தில் எழுதியதாக தெரியுமா? அந்தப் பாடல் தான் பின்னர் எம்ஜிஆரின் பெரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகி விட்டது!

அது ‘அன்பே வா’ திரைப்படத்தின் கதை. இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் இருந்து வாலிக்கு கம்போசிங் அழைப்பு வந்தது. ஸ்டூடியோ செல்லும் முன் ஒரு டீ கடையில் நின்றார் வாலி. அப்போது அங்கிருந்த ரேடியோவில் எம்ஜிஆர் நடித்த ‘பணத்தோட்டம்’ படத்தின் “பேசுவது கிளியா…” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்தப் பாடலைக் கேட்டு அங்கிருந்த இரு எம்ஜிஆர் ரசிகர்கள், “எம்.ஜி.ஆருக்காக உணர்ச்சியுடன் பாடல் எழுத முடிவது கண்ணதாசன் மாத்திரமே… வாலி போல் யாராலும் முடியாது” என்று பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த வார்த்தைகள் வாலியின் காதில் விழ, அவர் உள்ளுக்குள் நெருப்பாகி விட்டார். வெளியில் சொல்லாமல் இருந்தாலும், அந்தக் கோபத்தை மனதில் தாங்கிக் கொண்டு நேராக ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார்.

அங்கு எம்.எஸ்.வி. ஒரு மெலடியை வாசித்துக் காட்ட, சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்த வாலி, தன் மனக்கோபத்தை கலைப்படுத்தும் வகையில் எழுதிய வரிகள் —“நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன்…”

அந்த வரிகள் எம்.எஸ்.வியையும் எம்ஜிஆரையும் கவர்ந்தது. பாடல் முடிந்ததும் எம்ஜிஆர் கேட்டார், “ஆண்டவர் எங்கே?” என்று. வாலி முன்னே வர, எம்ஜிஆர் புன்னகையுடன், “என்னமா எழுதியிருக்கீங்க… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆண்டவரே!” என்று கூறி வாலியின் கன்னத்தில் முத்தமிட்டாராம்.

அந்தக் கோபத்தில் பிறந்த பாடல் இன்று காதலின் கிளாசிக்காக போற்றப்படுகிறது. “அவள் நினைவாலே என் காலம் செல்லும்…” என்ற வரிகள் காலத்தை கடந்தும் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கின்றன.

வாலியின் கோபம் ஒரு நிமிடத்திற்கு இருந்திருக்கலாம்… ஆனால் அந்தக் கோபத்தில் பிறந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know the story of Vali song written in anger towards MGR a hit across the board


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->