நடிகர் விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்! லைகா வழக்கில் கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி!
Legal Blow to Actor Vishal Court Rejects Extension Plea in Lyca Case
லைகா நிறுவனத்துடனான கடன் விவகாரத்தில், 10 கோடி ரூபாய் வைப்புத் தொகை செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய நடிகர் விஷாலின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கின் பின்னணி
லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 21.29 கோடி ரூபாயை 30% வட்டியுடன் திருப்பிச் செலுத்த விஷாலுக்குத் தனி நீதிபதி முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்தபோது, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, பாதுகாப்பு நிதியாக 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய ஆணையிட்டது.
மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்?
தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பணத்தைத் திரட்ட சிரமம் இருப்பதாகக் கூறி, டெபாசிட் செய்ய 6 வார கால அவகாசம் வேண்டி விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் ஆஜராகி வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்து ஏற்கனவே எட்டு வாரங்கள் கடந்துவிட்டதைச் சுட்டிக்காட்டினர்.
நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்டதால், மேற்கொண்டு சலுகை வழங்க முடியாது எனக் கூறி விஷாலின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்த உத்தரவு காரணமாக, நடிகர் விஷால் தரப்பு உடனடியாக 10 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
English Summary
Legal Blow to Actor Vishal Court Rejects Extension Plea in Lyca Case