சூப்பர் சிங்கர் சீசன் 9  டைட்டிலை வென்றார் அருணா.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்துள்ளது.

இந்த நிலையில் 9வது சீசன் சமீப நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.

அந்த வகையில் இன்று சூப்பர் சிங்கர் 9 சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் அபிஜித் அருணா பூஜா பிரியா பிரசன்னா ஆகிய ஐந்து பேர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் 9வது டைட்டிலை அருணா தட்டிச் சென்றுள்ளார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரியா 2வது இடமும், பிரசன்னா 3வது இடமும் பிடித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aruna won super singer 9 season title


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->