பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.! மும்பை போலீஸ் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைதாகியுள்ளார்.

சமீபத்தில் சல்மான் கானின் மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கர் பாந்த்ரா சல்மான் கானுக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை பிளாக்பக்  என்ற மான்களை வேட்டையாடியது தொடர்பாக சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் தண்டனையும் பெற்று விட்டார். 

அந்த சம்பவம்  தொடர்பாக பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஸ்னாய் "சல்மான் கான் அந்த மானை வேட்டையாடி தங்களது இனத்திற்கு அவமரியாதை செய்துவிட்டார் என்பதால் அவர் மீதும் அவரது தந்தை சலீம் கான் மீதும் கடும் கோபத்தில் இருப்பதாக  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கனடாவில் பதுங்கியிருக்கும் லாரன்ஸ் பிஸ்னாயின் நண்பர் கோல்டி பிரார் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கரின்  மின்னஞ்சலுக்கு இமெயில் செய்து இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு விசாரித்து ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் உள்ள சியாகோ கி தானி ஊரை சேர்ந்த தாகட் ராம் பிஷ்னோய் (வயது21) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தான் ரோகித் கார்க் எனும் பெயரில் நடிகர் சல்மான் கானுக்கு ப்ளாக்மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவரை மும்பை போலீசார் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துவர இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrested Men Who black mail salman khan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->