எனக்குள் இருந்த ஆதங்கம் 'மாமன்னன்' - ஏ.ஆர்.ரஹ்மான்  - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த திரைப்படம் மாமன்னன். 

இந்த திரைப்படம் கடந்த மே 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் 80 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டது. 

விமர்சனம் ரீதியாக இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தொடர்ந்து நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளியானது. 

இந்நிலையில் நேற்று சென்னையில் மாமன்னன் 50 வது நாள் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பட குழுவினர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்திருப்பதாவது, 30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த கதை மாமன்னன். 

ஏன் இப்படி நடக்கிறது என்ற ஆதங்கம் தான். இசை மூலமாக எதையும் என்னால் செய்ய முடியவில்லை. 

இதனால் செய்ய முடிந்தவர்களிடம் நான் இணைந்து விட்டேன். இந்த படம் இவ்வளவு சிறப்பாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AR Rahman Mamannan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->