அதிமுக அமைச்சர் மற்றும் எம்பி.,க்கு பகிரங்க சவால்! அரசியலை விட்டே விலகுகிறேன்., கொந்தளிக்கும் பெண் எம்பி.,!  - Seithipunal
Seithipunal


கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு இடங்களில் உயர்மட்ட பாலம் கொண்டுவருவதற்கு, மாநிலங்களவை எம்பி தம்பிதுறை மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் காரணம் என்பது தொடர்பான மத்திய அரசின் கடிதத்தை கொடுத்தால், அரசியலைவிட்டு விலகுகிறேன் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளித்துள்ள பேட்டியில், "மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மூன்று இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க வேலை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல மண்மங்கலம் கோடங்கிபட்டி பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேலைகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற ஒரு கடிதத்தை, தமிழக  அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களோ, மாநிலங்களவை எம்பி தம்பிதுரை அவர்களோ இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியிட்டால், நான் அரசியலை விட்டே செல்கிறேன். அப்படி அவர்களால் வெளியிட முடியவில்லை என்றால், மன்னிப்பு கேட்டு அவர்கள் அரசியலை விட்டு விலகுவார்களா?.," என்று கேள்வி எழுப்பி உள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mp jothimani open challenge to admk mp and minister


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->