குரங்கு அம்மை வைரஸ்.. அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் குரங்கு அம்மை வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 58 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய்த் தொற்றானது சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பது ஆராய்ந்து முடிவெடுக்க இந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குரங்கு அம்மை பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த நோய்த்தொற்று குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டுமே பரவக் கூடியது அல்ல என்பது தெளிவாகிறது. சமூக பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைளால் கவனிக்கப்பட வேண்டும். இந்த நோயால் சிறிது பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Says about Monkey Pox


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->