பயனாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வாட்ஸ்அப் நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், திடீரென புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கமாகும்.

அந்த வகையில் பயனாளர்களின்  நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வீரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

தற்போது, வரை வாட்ஸ் அப்-பில் பயனாளர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை "எடிட்" செய்ய வழி இல்லை. ஒருமுறை குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால், அதனை எடிட் செய்திட முடியாது. அதனால் அந்த குறுஞ்செய்தியை நீக்க வேண்டிய நிலை தான் இருந்து வருகிறது. 

நீண்ட வாக்கியங்களில் குறுஞ்செய்தி அனுப்பும் போது, சிறு வாக்கிய தவறுக்காக மொத்த குறுஞ்செய்தியையும் நீக்க செய்வது பயனாளர்களுக்கு சிக்கலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சிக்கலை சரி செய்யும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp company new update


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?



Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?




Seithipunal