சிறையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்.. 1800 கைதிகள் தப்பியோட்டம்.!
West Africa Nigeria Prison Terrorist Attack 1800 Prisoners Escaped 6 April 2021
மேற்காபிரிக்க நாடுகளில் உள்ள நைஜீரியாவில் அரசை எதிர்த்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் போஹோஹராம் பயங்கரவாதிகள் பல கொடூர தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவில் இருக்கும் சிறையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நைஜீரியாவின் தெற்கு பிராந்திய பகுதியில் உள்ள காவல் நிலையங்கள், இராணுவ கட்டிடங்கள் மற்றும் சிறைச்சாலையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்துள்ளது.
கும்பலாக பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வரும் பயங்கரவாதிகள், இவ்வாறாக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். சிறைகளில் நடந்த தாக்குதலில் மொத்தமாக 1800 க்கும் அதிகமான கைதிகள் தப்பி சென்றுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
West Africa Nigeria Prison Terrorist Attack 1800 Prisoners Escaped 6 April 2021