போரினை நிறுத்தாவிட்டால் பல தலைமுறைகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்! உக்ரைன் அதிபர் எச்சரிக்கை.!
Ukraine president Speech
போர் இன்னும் தொடருமேயானால் அது ரஷ்யாவில் பல தலைமுறைகளுக்கு மிக பெரிய இழப்பை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யா தொடர்ந்து 25 வது நாளாக உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய படையின தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றனர். உக்ரைன் படையினர் ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்தி போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் மீதான போரை நிறுத்தாவிட்டால் அது ராஷ்யாவில் பல தலைமுறைகளுக்கு மிகப்பெரிய இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும் ஆகவே உடனடி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்றும் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.