துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 41,000 பலி.. தொடரும் மீட்புப் பணிகள்.! - Seithipunal
Seithipunal


துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது.

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

 இதைத்தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வீடுகளை இழந்த லட்சம் கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் துருக்கியில் 36,512 பேரும், சிரியாவில் 6020 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Turkey syriya earthquake 41000 peoples death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->