போர் நிறுத்தந்தை மீறிய இஸ்ரேல் மற்றும் ஈரான்: ஆபாச வார்த்தைகளால் திட்டிய ட்ரம்ப்..!
Trump lashes out at Israel and Iran for violating ceasefire
இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி தாக்குதல் நடத்தின.
இதனிடையே இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் தொடர்ந்தும் மோதல் நடந்து வருகிறது.

இது தொடர்பாக நெதர்லாந்தில் நடக்கும் நேடோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க கிளம்பும் முன்னர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன. ஒப்பந்தம் போட்ட நிலையில், அதனை மீறி, இஸ்ரேல் குண்டுகளை வீசியுள்ளது.
போர் நிறுத்த மீறலை வேண்டுமென்றே செய்ததாக தெரியவில்லை. ஆனால், இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும், ஒப்பந்தம் போட்டதும் உடனே ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதும் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதனை தடுக்க முடியுமா என பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியது இல்லை என்றும், பழிவாங்கல் அதிகமாக இருந்ததும், நியாயமாகச் சொன்னால், இஸ்ரேல் நிறைய ஆயுதங்களை பயன்படுத்தியது தனக்கு சுத்தமாக புடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நிலைப்பாடு தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளதோடு, சில ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளை திட்டியுள்ளார்.
English Summary
Trump lashes out at Israel and Iran for violating ceasefire