'அவசரகால நிலையின் நினைவுகள் மறக்க முடியாது: அதன் விளைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்து விட்டால், அது நாட்டிற்கு தீங்கை விளைவிக்கும்': அமித் ஷா பேச்சு..!
Amit Shah says if memories of Emergency fade from society it will be detrimental to the country
அவசரக்கால நிலைகள் போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கை விளைவிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது குறித்து பேசியுள்ளார். அத்துடன் அங்கு அவர் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு தினத்தை நாம் நினைவு கூர்கிறோம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் விவாதிக்க வேண்டும் என கேள்விகள் எழலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றின் முடிவு நல்லது அல்லது கெட்டதாக இருந்தாலும், அதன் நினைவுகள் சமூகத்தில் இருந்து மாறாது என்று குறிப்பிட்டுள்ளார்.
-kx5mu.png)
அத்துடன், ஜனநாயகத்தை உலுக்கிய அவசரகால நிலைமைகள் போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சர்வாதிகாரத்தை ஒருவராலும் பொறுத்து கொள்ள முடியாத காரணத்தினால் அவசரகால நிலைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாய் என்றும், எமர்ஜென்ஸியை யாரும் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதில், சர்வாதிகாரிகள் மற்றும் அதனால் பலனடைந்த சிறு குழுக்கள் மட்டுமே ஆதரித்தன என்று தெரிவித்துள்ளார்.
அவசரகால நிலைக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தலில், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி இல்லாத ஆட்சி அமைந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார் என்று கூறியுள்ளார்.
-y6z82.png)
மேலும் எமர்ஜென்ஸயை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாது என்றும், ஒரு ஜனநாயக நாட்டில், பல கட்சி ஜனநாயகத்தை சர்வாதிகாரத்திற்கான சதித்திட்டம் தான் இதற்கான எனது விளக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்ட போது, தனக்கு 11 வயதுதான் என்றும், இதன் தாக்கம், குஜராத்தில், ஜனதா கட்சி ஆட்சி காரணமாக, குறைவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி கவிழ்ந்த பிறகு, நிலைமை மாறியதாகவும், அமித்ஷா கிராமத்தில் மட்டும் 184 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அந்த நாட்களை அவருடையவாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Amit Shah says if memories of Emergency fade from society it will be detrimental to the country