உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள்: ஈவு இரக்கமின்றி இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 25 பேர் பலி, 146 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, காசாவில் வாடி பகுதியில்,சலா அல்-தின் சாலையில் உதவிப்பொருட்களுடன் வரும் லாரிகளுக்காக மக்கள் காத்திருந்துள்ளனர். அப்போது, அவர்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டதோடு, 146 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உதவி பொருட்கள் கொண்டுவந்த லாரிகளை நெருங்க மக்கள் ஓடிய போது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த 146 பேரில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என நுஷ்ரைத் அகதி முகாமில் உள்ள அவ்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

அத்துடன், இஸ்ரேலிய ராணுவத்தினர், டிரோன்கள், மற்றும் பீரங்கிகள் இணைந்து கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று உயிரிழந்தவர்கள் மூலம் காசாவில் கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 56,000-த்தை கடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

25 killed 146 injured in Israeli army shooting at people waiting for aid


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->