மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: வெற்றி குறித்து பொய் பேசாதீர்கள் ராகுல்: பட்னவிஸ் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருவதாக, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

25 தொகுதிகளில் 08 சதவீதம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளதாக ராகுல் கூறுகிறார். அவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெற்றுள்ளன என ராகுலுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: 

மஹாராஷ்டிராவில் அவமானகரமான தோல்வியால் உங்கள் வலி நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ளதோடு, மஹாராஷ்டிரா தேர்தலில் குறிப்பிட்ட 25 தொகுதிகளில் 08 சதவீதம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளதாக ராகுல் கூறுகிறார். அவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ராகுல் இருட்டு அறையை நோக்கி அம்புகளை எய்தப் போகிறார்..? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொது வெளியில் அள்ளி வீசுவதற்கு முன், ராகுல் தமது கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் விவரங்களை கேட்டுவிட்டு பேசினால் நல்லது என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont lie about victory in Maharashtra assembly elections Fadnavis slams Rahul


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->