சுயமரியாதையை ஈரானிடம் இருந்து மோடி அரசு கற்றுக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்..!
Sanjay Raut says Modi government should learn self respect from Iran
சுயமரியாதை மற்றும் தைரியம் என்றால் என்ன என்பதை ஈரான் உலகிற்குக் காட்டியுள்ளது. மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி அத்தனை ஈரானிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிவசேனா உத்தவ் பிரிவுத் தலைவர் சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அப்போது, இராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் காட்டும் துணிச்சலை அவர் பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதுகுறித்து சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் குறிப்பிடுகையில், "நெருக்கடியின் அனைத்து நேரங்களிலும் ஈரான் எப்போதும் இந்தியாவுடன் நின்றுள்ளது. காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடனான மோதலாக இருந்தாலும் சரி, ஈரான் எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, அவர்கள் யாருக்கும் பணிந்து போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Sanjay Raut says Modi government should learn self respect from Iran