வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளஆதவ் அர்ஜுனா; உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை..!
The High Court is set to hear a case soon alleging that Adhav Arjuna concealed asset details in his nomination papers
தமிழக வெற்றி கழக வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா களமிறங்கியுள்ளார். அவரது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜி தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை வேட்புமனுவில் படிவம் 26-இல் தெரிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, வில்லிவாக்கம் தொகுதி த வெ க வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவியின் சொத்துக்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார். ரூ.117 கோடி சொத்துக்களை கொண்ட மார்ட்டின் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், ரூ.123 கோடி சொத்துக்களை கொண்ட டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இயக்குனராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்ஸிக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வேட்புமனுவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சொத்துக்களில் பல, அமலாக்க துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ள என்றும், வேட்பு மனு பரிசீலனையின் போது, மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜுனா மறைத்துள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் அதை முறையாக பரிசீலிக்காமல் ஆணையம் நிராகரித்து விட்டது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், தனது புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், சொத்து விவரங்களை மறைத்த விவகாரம் தொடர்பாக தான் அளித்த புகார் மீது முறையாக விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு குறித்த விரைவில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The High Court is set to hear a case soon alleging that Adhav Arjuna concealed asset details in his nomination papers