#ஜெர்மனி || ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து.! 4 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் ரயில் தடம்புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஜெர்மனியின் தென்கிழக்கு மாநிலமான பவேரியாவில் பல மாணவர்களை ஏற்றிச் சென்ற ரயில், முனிச் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது ​​கார்மிஷ்-பார்டென்கிர்சென் பகுதியின் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தரைக்கு இறங்கி கவிழ்ந்துள்ளது.

ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிர் இழந்து உள்ளனர். மேலும் 30க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

இதைத் தொடர்ந்து இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train derailment accident in Germany


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->