லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 83 குழந்தைகள் உள்பட 394 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல்..! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் முதல் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 83 குழந்தைகள் மற்றும் 42 பெண்கள் உட்பட 394 பேர் கொல்லப்பட்டதாகவும், படுகாயம் அடைந்த 1,130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் 394 பேரில் ஒன்பது மீட்புப் பணியாளர்களும் அடங்குவர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய பெய்ரூட்டில் உள்ள ஒரு ஹோட்டல் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீதான தாக்குதலுக்கு சுகாதார அமைச்சர் ரகன் நாசெரெடின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் லெபனான் இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ நிறுவல்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், மாறாக பொதுமக்கள் வீடுகள், துணை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், கடந்த 48 மணி நேரத்தில் தாக்குதலில் பலினாவர்களின் எண்ணிக்கை வேகம் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்தவில்லை. 2023 ஆம் ஆண்டு காசாவில் அதன் பாலஸ்தீனிய நட்பு நாடான ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலைத் தாக்கியபோது இந்த பிரச்சினை வெடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The country's Health Ministry has reported that 394 people including 83 children have been killed in the Israeli attack on Lebanon


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->