உ.பி : நாய் கடித்ததை மறைத்த சிறுவன் - ஒரு மாதத்திற்கு பிறகு நடந்த விபரீதம்.!
student died dog bit after one month in uttar pradesh
உ.பி : நாய் கடித்ததை மறைத்த சிறுவன் - ஒரு மாதத்திற்கு பிறகு நடந்த விபரீதம்.!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் சரண் சிங் காலனியை சேர்ந்தவர் யாக்கூப். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஷாவாஸ்.
இவரை பக்கத்து வீட்டில் வளர்ந்து வரும் பமோரியன் நாய் குட்டி ஒன்று கடந்த மாதம் கடித்துள்ளது. இதனை ஷாவாஸ் பெற்றோரிடம் கூறாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4ம் தேதி காலையில் இருந்து சிறுவனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

அவரது நடத்தையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதைப்பார்த்து பதறிப் போன பெற்றோர் சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனை நாய் கடித்து விஷமேறி இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தியதில், பக்கத்து வீட்டில் உள்ள நாய்குட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தன்னை கடித்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதன் படி போலீசார் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நாய் குட்டிக்கு தடுப்பூசி போடாமல் வளர்த்து வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
student died dog bit after one month in uttar pradesh