உக்ரைனின் கிழக்குப் பகுதியை கைப்பற்ற ரஷ்யா படைகள் தீவிர தாக்குதல்.!
Russia has launched an offensive in eastern Ukraine
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போரினால் உக்ரைனின் பல நகரங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் விதமாக தலைநகர் கீவ், மரியுபோல் பகுதிகளை குண்டு வீசி தாக்கி அழித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன் விளைவாக கிழக்கு உக்ரைனில் டொனட்ஸ்க் பகுதியிலுள்ள லிமான் நகரை ரஷ்யப் படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து உக்ரைன் மற்றும் நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து போராடி வருகின்றனர்.
English Summary
Russia has launched an offensive in eastern Ukraine