குழந்தை பெற்றால் ரூ.5.66 லட்சம்- சீனாவில் தனியார் நிறுவனம் அறிவிப்பு!
Rs 5.66 lakh if you have a child Private company announcement in China
சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை ஒரு குழந்தை கொள்கை நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் விளைவாக தற்போது சீனாவில் இளம்வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும், கடன்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள் முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ட்ரிப்.காம் எனும் இணையதள வர்த்தக குழுமம், வரும் ஜூலை 1 முதல், தனது பணியாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியை அறிவித்துள்ளது.

அதன்படி பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு படி சுமார் ரூ.5,66,000 வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,14,000 ரொக்க மானியமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது. இது குறித்து டிரிப்.காம் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறும்போது, "பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்து வருகிறேன்.
மேலும் பல தனியார் நிறுவனங்களும் இது போன்ற அறிவித்து தங்கள் பங்களிப்பை செய்ய முடியும்" என்று தெரிவித்தார். சீனாவில் 2021ல் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 என இருந்த நிலையில், கடந்தாண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. குழந்தை பராமரிப்பு செலவு மற்றும் கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை இதற்கான முக்கிய காரணங்கள் என்று அந்நாட்டு இளைஞர்கள் கூறுகின்றனர்.
English Summary
Rs 5.66 lakh if you have a child Private company announcement in China