ஜப்பான், சீனா செல்லும் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி வருகிற 29ம் தேதி ஜப்பானுக்கு சென்று, பின்னர் சீனாவுக்கு பயணம் செய்ய உள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி 2 நாள் பயணமாக வருகிற 29ம் தேதி செல்கிறார்.

அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புதுமை போன்ற பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இது பிரதமராக மோடி மேற்கொள்ளும் 8வது ஜப்பான் பயணமாகும்.

ஜப்பான் பயணத்தை முடித்ததும், மோடி ஜூலை 31 அன்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு செல்கிறார். அங்கு ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

மாநாட்டின் போது ஜின்பிங்குடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும். மேலும் ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி கடைசியாக 2018 ஜூன் மாதம் SCO மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு சென்றிருந்தார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, 2020 கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ மோதலுக்கு பிறகு இரு நாடுகளின் உறவில் ஏற்பட்ட விரிசல் இன்னும் முழுமையாக சரியாகாத சூழ்நிலையில், இந்தச் சந்திப்பு கவனம் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா விதித்த வரி கொள்கைகளால் சீனாவும் இந்தியாவும் தங்களது வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. எனவே, பிரதமர் மோடியின் இந்த சீனா பயணம், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பாக கருதப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi visit japan China 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->