மிக முக்கிய 5 பயங்கரவாதிகளை வீழ்த்திய இந்தியா! உறுதியான தகவல்! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடி தரும் நோக்கில், மே 7ம் தேதி இந்தியா மிகச்செயலாற்றும் தாக்குதலை நடத்தியது.

இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தானில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. பஹவல்பூரில் இயங்கி வந்த ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகம் மற்றும் முரிட்கே பகுதியிலுள்ள லஷ்கரின் முகாம்களும் இதில் அடங்கும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்த தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதலில் ஐந்து முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்திய அதிகாரிகள் மே 10ம் தேதி உறுதிபடுத்தியுள்ளனர். முக்கியமாக, லெப்டினன்ட் ஜெனரலின் முன்னிலையில் இறுதிச் சடங்கு நடைபெற்ற முடாசர் காதியான், ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர்கள் ஹபீஸ் முகமது ஜமீல் மற்றும் முகமது யூசுப் அசார், லஷ்கர் தளபதி காலித், மற்றும் ஜெய்ஷ் இயக்கத்தின் காஷ்மீர் பிரிவு தலைவர் முகமது ஹசன் கான் ஆகியோர் அடங்குகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Operation Sindoor India Pakistan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->