மகிந்த ராஜபக்சேவை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே பதவிக்கு ஆபத்து.. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து, அடுத்த ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.

அதற்கான அரசியல் திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் ஆவதற்கு விருப்பம் தெரிவிக்க, ஐக்கிய தேசிய கட்சி தலைவராவன ரனில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக நேற்று மாலை பொறுப்பேற்று கொண்டார்.  இன்று இலங்கையில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டு, பதவி ஏற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வருகின்ற 17ஆம் தேதி விவாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோத்தபய ராஜபக்சே அதிபராக உள்ளார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

next issue for Gotabaya Rajapaksa


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->