7-வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்! - Seithipunal
Seithipunal


 நார்வே செஸ் போட்டியில் 10- முறை நடந்த  சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.


2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்றுவந்தது.இந்த  செஸ் போட்டியில்  ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்  உள்பட 6 வீரர்கள் பங்கேற்றனர் . இந்த  செஸ் போட்டியில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோதி  விளையாடினர்.

 இந்நிலையில், 10- முறை நடந்த  சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் .இதனால் கருவானா 2-வது இடத்தில் உள்ளார்.

10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடமும் , கருவானா 15.5 புள்ளிகளுடனும் 2-வது இடமும் , குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் 3-வது இடமும்  பிடித்தனர்.மேலும் இந்த போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 4-வது இடத்திலும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கார்ல்சன் கூறும்போது, போட்டி தொடரை வென்றது நிம்மதி அளிக்கிறது. போட்டி முடிவு, ரோலர்கோஸ்டர் போன்று இருந்தது. குகேஷ் மற்றும் எரிகைசி நன்றாக விளையாடினார்கள். ஆனால், அவர்கள் இன்னும் தங்களை தயார்படுத்தி கொள்ள சிறிது நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார். 

மேலும் அர்மீனியாவிலும் நடந்த போட்டி தொடரில்  பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் மிக சிறந்த செஸ் விளையாட்டை வெளிப்படுத்தினர். குகேசுடன் விளையாடியது மனதில் நிற்கும் வகையில் இருந்தது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Magnus Carlsen won the championship for the 7th time


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->