'விரைந்து செயல்படுவது நல்லது'...! ஈரானை நோக்கி டிரம்ப் வீசிய வார்த்தை ஏவுகணை...! - உலக அரசியலில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது கடந்த பிப்ரவரி இருபத்தெட்டாம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்த தாக்குதல், மேற்காசிய அரசியல் சூழலை தீப்பிடித்த காட்டாக மாற்றியுள்ளது. இந்த மோதலின்போது, ஈரானின் உயரிய ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சுமார் நாற்பது நாட்கள் கடுமையான போர் நிலை நீடித்த நிலையில், தற்போது தற்காலிக போர்நிறுத்தம் அமலில் உள்ளது.வளைகுடா பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சியுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், ஈரானின் கடற்பகுதி முற்றுகை, ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் கடல் வர்த்தகப் பாதை தொடர்பான பதற்றங்கள் காரணமாக அமைதி ஒப்பந்தம் இதுவரை எட்டப்படவில்லை. இதனால் வளைகுடா நாடுகள் முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து உலக அரசியல் அரங்கில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், “ஈரானுக்கான காலக்கெடு வேகமாக நகர்கிறது. அவர்கள் உடனடியாக செயல்படுவது நல்லது. இல்லையெனில் உலக வரைபடத்தில் அவர்களின் அடையாளமே காணாமல் போகும்” என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதுமட்டுமின்றி, ஈரானை இலக்காகக் குறிவைத்து அம்புக்குறியுடன் சித்தரிக்கப்பட்ட வரைபடப் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சில அரபு நாடுகள் அமெரிக்க ஆதரவு வளையத்தில் இருப்பதுபோல அமெரிக்கக் கொடியின் நிற வடிவத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதற்கு முந்தைய நாளில், “இது புயலுக்கு முந்தைய அமைதி” என்ற மர்ம வாசகத்தையும் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

மேலும் “அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவோம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தொப்பி அணிந்தபடி, அமெரிக்க கடற்படை கப்பலில் கடற்படை அதிகாரியுடன் நிற்பது போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.டிரம்பின் தொடர்ச்சியான இந்த பதிவுகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதன் பின்னணியில் ஈரான் மீது மீண்டும் தீவிர தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறதா என்ற சந்தேகங்களும் வலுத்து வருகின்றன. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர்மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Its better to act quickly Trump verbal missile at Iran Great excitement world politics


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->