இஸ்ரேலின் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா.!! - Seithipunal
Seithipunal


கடந்த 1967 ஆம் வருடத்தில் மத்திய கிழக்கு போர் சமயத்தில் பாலஸ்தீன நாட்டின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்து கொண்டது. இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீனத்தில் எழுச்சி உருவாகவே, கடந்த 2017 ஆம் வருடத்தில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகாரம் அளித்து உத்தரவிட்டது. 

இதன் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்தது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இஸ்ரேல் நாடு அமெரிக்கா மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாலும், பிரச்சனைக்கு முழு தீர்வுகள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், சமீபத்தில் இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற பெஞ்சமின் நெட்டன்யாஹு தலைமையிலான அரசு சர்ச்சைக்குரிய மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பதாக அறிவித்தது. இந்த சமயத்தில், தொலைக்காட்சியின் மூலமாக பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேல் நாடு மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உட்பட அணைத்து ஒப்பந்தமும் முடிவிற்கு வருகிறது. 2 மாகாண உருவாக்கத்திற்கான முடிவுகளின் அடிப்படையில், இஸ்ரேலுடன் மோதலை தீர்க்க பாலஸ்தீனம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel America agreement end announce by Israel President


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->