இந்தோனேசியா எரிமலை வெடிப்பு: தொடரும் பலி எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா, சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியதால் அங்கு மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினார். 

மலை ஏற்றத்திற்காக மொத்தம் 75 வீரர்கள் சென்றிருந்தனர். அவர்களின் 46 பேர் மட்டுமே கீழே இறங்கி வந்தனர். மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

அதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரை மீட்பு குழு தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழு மீட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 

எரிமலை வெடிப்பின் காரணமாக காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia volcano death rises


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->