இந்திய மென்பொறியாளர் சடலமாக கண்டெடுப்பு..வாஷிங்டனில் அதிர்ச்சி!
Indian engineer found dead Shock in Washington
மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுக்க பட்ட சம்பவத்துக்கு கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வாலியில் உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகம்.இந்த சிலிகான் வாலியில் தான் மெட்டா, கூகுள் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைமையகம் உள்ளது. இங்குள்ள நிறுவனங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மென்பொறியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த பிரதிக் பாண்டே என்பவர் மைக்ரோசாப்ட்டின் துணை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தபோது கடந்த 19 ஆம் தேதி அலுவலக வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய மென்பொறியாளர் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது.
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சந்தேகத்திற்கிடமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் கிரிமினல் செயல்கள் நடைபெற்றதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொடர்ந்து உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள பிரதிக் பாண்டே கடந்த 2020 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அதற்கு முன்பாக வால்மார்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian engineer found dead Shock in Washington