திடீரென சிலியை உலுக்கிய பலமான நிலநடுக்கம்.! பேரதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் அவ்வப்போது திடீரென நிலநடுக்கமானது ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசிய நாடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கமானது தொடர்ந்து ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. 

இந்தியாவிலும் தற்போது நிலநடுக்கத்தின் தாக்கமானது ஆங்காங்கே உணரப்பட்டு வரும் நிலையில்., பெரும்பாலான நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதத்தையும்., உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கும் சிலி நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூட கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல கோடிக்கணக்கான பொருட் சேதமும் ஏற்பட்டது. 

இந்த நிலையில்., இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்ற அங்குள்ள பொது மற்றும் திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in sili have a massive earthquake rictar scale responding 6.5


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->