இடைமறித்த கடத்தல் கும்பல்.. அரங்கேற்றப்பட்ட கொடூரம்.. 23 கிமீ பயணத்தில் அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் இருந்து மெக்சிகோ நாட்டில் குடியேறிய குடும்பம் அங்குள்ள லா மோரா நகரில் வசித்து வருகின்றனர். இவர்களின் குடும்பத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்து குடும்பத்துடன் சென்று கொண்டு இருந்துள்ளனர். 

இந்த தருணத்தில்., இவர்களின் காரானது அங்குள்ள காட்டுப்பகுதியின் வழியாக சென்று கொண்டு இருந்த நிலையில்., இவர்களை இடைமறித்த போதை பொருள் கும்பலானது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலில் அடுத்தடுத்து வந்த மூன்று வாகனங்களும் தீக்கிரையாகவே., அதில் இருந்த 3 பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்., கடத்தல் கும்பலின் சார்பாக தவறுதலான தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளதாககவும் கூறப்பட்டுள்ளது. 

died, suicide attempt, killed, murder,

இந்த தாக்குதலில் உயிர் தப்பியிருந்த 13 வயதாகும் சிறுவன்., தனது குடும்பத்தினரை காக்கும் பொருட்டு சுமார் 23 கிமீ தூரத்திற்கு நடந்து சென்று உதவி கேட்ட துயரமானது நடந்துள்ளது. மேலும்., 13 வயதுடைய சிறுவன் 7 மாத குழந்தை உட்பட., தனது உறவுக்கார சிறுவர்கள் 7 பேரை காப்பாற்றி புதரில் மறைந்துள்ளார். 

பின்னர் சுமார் காட்டுப்பகுதியில் இருந்து சாலை வழியாக 23 கிமீ நடந்து சென்றதில் காவல் துறையினரிடம் கூறியுள்ளான். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தைகளை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico drug gang killed peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->