செத்துமடியும் உயிரினங்களை காக்க,  உணவுகளை ஹெலிகாப்டரின் உதவியுடன் வைக்கும் அரசு...! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தென்கிழக்கு பகுதியில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் மற்றும் விக்ட்டோரியா மாகாணத்தில் செப்டம்பர் மாதத்தின் முதலாகவே காட்டுத்தீயானது பற்றியெறிந்து வருகிறது. 

பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீகிக்கு தற்போது வரை 24 பேர் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறந்துள்ளது. 

காட்டுட்த்தீயில் இருந்து விலங்குகளை காக்க தன்னார்வலர்கள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து போராடிக்கொண்டு வரும் நிலையில், காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் மற்றும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளது. 

இதனால் காட்டுவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், ஹெலிகாப்டர் மூலமாக கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை வனப்பகுதியில் அந்நாட்டு அரசு கொட்டிவருகிறது. 

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த நேரத்தில், காட்டுத்தீயினை கட்டுப்படுத்த முயற்சிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர் பிழைத்த விலங்குகளுக்கு டன் கணக்கில் கேரட் மற்றும் உருளைக்கிழங்குகளை ஹெலிகாப்டரின் உதவியுடன் வனப்பகுதியில் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Australia forest fire govt give food


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->