சோமாலியா :  விருந்தினர் மாளிகைக்குள் தற்கொலை படை தாக்குதல் - 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சோமாலியா நாட்டில் உள்ள ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் அரசு அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். 

அந்த நேரத்தில், அந்த விருந்தினர் மாளிகைக்குள் திடீரென வாகனம் ஒன்று அனுமதியில்லாமல் உள்ளே புகுந்துள்ளது. அந்த வாகனத்தில் வெடி பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தது. அப்போது திடீரென அந்த வாகனத்தில் இருந்தவர் தன்னைத்தானே வெடிக்க செய்தார். 

இந்த விபத்தில் அந்த வாகனத்தில் இருந்தவர் உள்பட சுமார் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் ஜூபலாந்து மாகாண கவர்னர் உள்பட மொத்தம் 11 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதற்கு இதுவரைக்கும் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி  இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died in somaliya for Suicide Squad Attack


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->