சீனாவில் கொடூரம் - ஐந்து பேரின் உயிரை வாங்கிய ராட்சத கிரேன்.!  - Seithipunal
Seithipunal


சீனாவில் கொடூரம் - ஐந்து பேரின் உயிரை வாங்கிய ராட்சத கிரேன்.! 
 
சீன நாட்டில் உள்ள ஜியான்யாங் மாகாணத்தில் துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் படி நேற்று, வழக்கம் போல் கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராட்சத டவர் கிரேன் சரிந்து விழுந்தது.

இதைப் பார்த்ததும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுவதற்காக அங்கும் இங்குமாக ஓடினர். இருப்பினும், 6 தொழிலாளர்களின் மேலே கிரேன் விழுந்தது. 

இதனால், அவர்களின் உடல்கள் முற்றிலுமாக நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples died and five peoples injured for crane falls in china


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->