இலங்கையில் வெடிக்கும் போராட்டம்.. ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளை காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதற்கிடையே இலங்கையில் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சேஷ வீட்டு முன்பு போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். மேலும், ஆளும் கட்சியினர் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, இலங்கையில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிலை வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு ஆனது நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

extension of curfew in sri lanka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->