இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா.!
Earthquake in Indonesia 6.4 rictor measurement
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சத்தில் பொதுமக்கள் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயுலாபோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கம் ஆச்சே மாகாணம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
English Summary
Earthquake in Indonesia 6.4 rictor measurement