ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் தெற்கே 137 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.40 மணியளவில் திடீரென மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 170 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. 

அந்நாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு குறைந்தது ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1,500க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர். ஒரு மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Afghanistan 4.7 rictor measurement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->