'அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு தான் வேண்டும்'; அடம் பிடிக்கும் டொனால்ட் டிரம்ப்..!
Donald Trump says he wants the Nobel Peace Prize
ஜம்மு- காஷ்மீரில், பஹல்காம் சுற்றுலாத்தளத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. நாட்டை உலுக்கிய இந்த கொடூர தாக்குதலுக்கு பின், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் மோதல் நிலவியது. இந்த இருநாடுகளுக்குமிடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கும் சூழல் இருந்தது. எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை. என்றும், ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார் என்று விமர்சித்தார்.
அத்துடன், இதுவரை அமைதிக்காக, சுமார் 08 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன் என்றும், அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார். அதேநேரம், சர்வதேச விதிகள் தனக்கு பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப், வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார் இதே நேரத்தில், வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கு மத்தியில் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
English Summary
Donald Trump says he wants the Nobel Peace Prize