இலங்கையில் வெடிக்கும் போராட்டம்.. அவசர நிலை பிரகடனம்.. அதிபர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலை மக்கள் சந்தித்து வருகின்றனர். உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் நிலையங்களில் மணி கணக்கில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். 

கொழும்பு நகரில் தினமும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நகரங்களில் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப் படுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். 

இதனிடையே நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இராணுவ வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டதால். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேஷ அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

declaration of emergency in sri lanka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->