ஆப்கானை உலுக்கிய நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது ஹெராட் என்ற பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டது. அதே இடத்தில் அடுத்தடுத்து 5 முறை ரிக்டர் அளவில் 6.3 முதல் 4.6 வரை பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர்.

வீட்டைவிட்டு வெளியேறிய பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானையே உலுக்கிய இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 2,000த்தை தண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்தால் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கதால் சுமார் 2,500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death toll from earthquake in Afghanistan rises to more than 1000


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->