சைப்ரஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்ற அந்நாட்டு அதிபர்..!
Cyprus President gives enthusiastic welcome to Prime Minister Modi upon his arrival
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்படி சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ள அவரை விமான நிலையத்திற்கு வந்து அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு, பிரதமர் மோடியை வரவேற்றுள்ளார்.
அங்குள்ள இந்திய வம்சாவளியினரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
நடப்பாண்டிற்கான 'ஜி7' நாடுகளின் உச்சி மாநாடு வட அமெரிக்க நாடான கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது 'ஜி7' அமைப்பு.
-s2rnq.png)
இந்த சைப்ரஸ் நாடு சுற்றுப்பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: சைப்ரசில் தரையிறங்கினேன். விமான நிலையம் வந்து என்னை வரவேற்று சிறப்புற செய்த சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசுக்கு நன்றி. இந்த பயணம் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கும் எனக்கூறியுள்ளார்.
அந்நாட்டில் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை பார்க்க, இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் ஒன்று கூடியநிலையில், அவர்களை நோக்கி கையசைத்த பிரதமர் மோடி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர், 'பாரத் மாதா கி ஜே ' எனறு கூற, அங்கிருந்தவர்களும் உற்சாகமாக அதனை திரும்ப கூறி உற்சாகப்படுத்தினர்.
English Summary
Cyprus President gives enthusiastic welcome to Prime Minister Modi upon his arrival