400 க்கும் மேற்பட்ட யானைகளை உயிரிழந்த விவகாரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!
Botswana Elephant died issue
உலகில் அதிகளவு யானைகளை கொண்ட நாடுகளில் போட்ஸ்வானா முதல் நாடாக இருக்கிறது. இந்த நாட்டில் 1 இலட்சத்து 30 ஆயிரம் யானைகள் இருக்கிறது. இங்குள்ள ஓடவாங்கோ டெல்ட்டா பகுதியில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மொத்தமாக 350 க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்தது தெரியவந்துள்ளது.
இந்த யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படாமல் இருந்த நிலையில், யானைகள் வேட்டையாடாமல் எப்படி? இறந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த விஷயம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வந்தது.
இந்த ஆவின் முடிவில் யானைகள் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், சிலர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த யானைகளின் உடல்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட மந்திரிகளின் அடிப்படையில், யானைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், தேங்கியுள்ள நீரை குடிக்கையில், அதில் உள்ள நச்சு நிறைந்த பாக்டீரியா காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Botswana Elephant died issue